Brahmasri Vedapuri Sastrigal , an Anukka Thondar (Sevaka) of Sri MahaPeriyava came to HIM at a very tender age of 8 in the year 1944 in Esayanur Village. Vedapuri mama was drenched in MahaPeriyava’s Vatsalyam since then…
- ஒரு பிள்ளை அப்பா கிட்ட இருக்கட்டும், ஒரு பிள்ளை நீ என் கிட்ட வந்துடுறியா? – asked Umachi Thatha to that little boy…
- பல்லாக்கு தறந்து பாத்தியா ? நான் இருந்தேன்னா? – Periyava played prank with mama by becoming invisible inside the Pallaku…
- “இன்னி லேந்து நீ பிரம்மஸ்ரீ டா” – Periyava bestowed “Brahmasri” title on Mama and since then Vedapuri mama became “Brahmasri” Vedapuri Sastrigal.
- Mama narrates few other incidents like the visits of Kamarajar, Annadurai, MGR and Karunanidhi…
- Mama was blessed to be with Periyava throughout HIS yatra times.
- He was also blessed to witness a divine scene of MahaPeriyava doing “Thapas” with one leg folded. Also, Mama was blessed to see MahaPeriyava doing Anga Pradhakshinam to Kamakshi Ambal in Kamakshi Amman temple…
மகாபெரியவாளுக்கு எத்தனை எத்தனை ஜென்மம் எடுத்து கைங்கர்யம் பண்ணினாலும் போறாது – says, “Brahmasri” Vedapuri Mama.
By offering one ‘pushpam’ (flower) to Periyava, we have a big wishlist for Periyava to bless us… But, these Sevaka(s) like Vedapuri mama think it is their blessings and ‘Punyam’ to serve Periyava!
Story of Brahmasri Vedapuri becoming part of Mahaswami
இனிமே இந்த கொழந்தைய நா, பாத்துக்கறேன்!
எசையனூரை சேர்ந்த, ப்ரஹ்மஸ்ரீ வேதபுரி மாமா பெரியவாளுக்கு மிகவும் செல்லமான குழந்தை!
ஒருமுறை சாதுர்மாஸ்யத்துக்கு எசையனூரில் பெரியவா முகாமிட்டிருந்தார். அப்போது 8 வயஸு சிறுவன் வேதபுரிக்கு, பெரியவாளின் பரம பக்தையான கோகிலாப்பாட்டி என்ற எசையனூர் பாட்டி சொல்வதே வேதவாக்கு!
“வேதபுரி….. தெனோமும் வயல்லேர்ந்து பூ எல்லாத்தையும் பறிச்சிண்டு வந்து, பெரியவாளுக்கு முன்னால வெச்சுட்டு நமஸ்காரம் பண்ணு! பல்லு தேச்சுட்டு, விபூதி இட்டுண்டு பூவை பறிக்கணும்…என்ன?”
கர்ம ஶ்ரத்தையோடு பாட்டி சொன்னதை சிறுவன் வேதபுரி கடைப்பிடித்தான். ஒருநாள், ஸ்ரீ த்ருபுரஸுந்தரி ஸமேத சந்த்ரமௌலீஶ்வர பூஜை முடிந்ததும், பெரியவா எல்லாருக்கும் தீர்த்தம் குடுத்தார். வேதபுரி தீர்த்தம் வாங்க கையை நீட்டியதும், பெரியவாளின் திருக்கரத்திலிருந்து தீர்த்தம் வேதபுரியின் குட்டிக் கைகளில் விழுந்தது; கூடவே, திருவாயிலிருந்து ஒரு கட்டளையும் விழுந்தது!
“இங்கியே ஓரமா நில்லு….”
என்னமோ, ஏதோ, என்று பயந்து கொண்டு திரு திருவென்று முழித்துக் கொண்டு ஓரமாக நிற்கும் வேதபுரியைப் பார்த்ததும், பெரியவா சிரித்துக் கொண்டே, அதிக வாஞ்சையுடன்,
“பயப்படாதேடா! ஒங்கிட்ட பேசணும்!…”
ஜகதாச்சார்யனுக்கு, இந்த சிறுவனிடம் அப்படி என்ன பேச வேண்டுமோ? தன் பாதங்களில் விழ வேண்டிய புஷ்பங்களை பகவானே தேர்வு செய்வான்!
எல்லாருக்கும் தீர்த்தம் குடுத்தானதும், வேதபுரியைக் கூப்பிட்டார்.
“தெனோமும் பூ கொண்டு வரயே?……நீயா கொண்டு வரயா? இல்லேன்னா…..யாராவுது சொன்னதுனால கொண்டு வரயா?…”
குழந்தை மனஸில் உள்ள ஸத்யம், பளிச்சென்று வாயிலும் வந்தது!
“கோகிலாப்பாட்டிதான் எங்கிட்ட தெனோமும் பெரியவாளுக்கு இப்டிப் பண்ணு-ன்னு சொன்னா! அதான் செய்யறேன்”
“ஓஹோ! பாட்டி சொல்லித்தான் செய்வியோ? ஏன்? ஒனக்கே தெரியாதா?…….”
“ஆத்துல யாராவுது பெரியவா சொல்லிக் குடுத்தாத்தானே எனக்கு தெரியும்? நா….சின்னக் கொழந்தை, ஒண்ணுமே தெரியாது….சொல்லிக் குடுத்தா செய்வேன்”
“வாடா! என் அன்பு மகனே!…..”
தெய்வம் தன் மகிழ்ச்சியை சிரிப்பாக கொட்டியது.
“எனக்கு ஒன்ன ரொம்ப பிடிச்சிருக்கு…..நீ….எங்கூட வரயா?…..என்ன ஸம்பளம் வேணும்? சொல்லு……”
“உம்மாச்சி என்ன குடுக்கறேளோ, அதை வாங்கிக்கறேன்”
பெரியவாளின் முகத்தில் புன்னகை அரும்பியது.
தன்னையே அல்லவோ முழுஸாகத் தந்துவிட்டார்! கோடிகோடியான பணமெல்லாம் இனி எந்த மூலைக்கு?
“உம்மாச்சி…..என்னோட அம்மா…..நா, சின்னவனா இருக்கச்சயே செத்துப் போய்ட்டா! அப்பாதான் என்னை வளக்கறார். அப்பா, ‘செரி’ன்னு சொன்னா….ஒங்களோட வரேன்”
“நீங்க எத்தனை கொழந்தேள்….. ஒங்க அப்பாக்கு?….”
“நா…..ஒரு அக்கா, ரெண்டு தம்பி. ஒரு தம்பி செத்துப் போய்ட்டான். அக்காவுக்கு கல்யாணமாயி புக்காத்துல இருக்கா…..”
“அப்போ செரி….ஒன்னோட தம்பி, ஒங்கப்பாவை பாத்துக்கட்டும்……நீ, என்னோட வா!…..”
என்ன ஒரு பாக்யம் !
“ஏண்டா வேதபுரி…..பெரியவா என்னடா பேசினா? சொல்லு….”
கோகிலாப்பாட்டி குருநாதரின் திருவாக்கில் வந்ததை கேட்க ஆசைப்பட்டாள்.
“என்னை பாத்து, ‘எங்கூட வரயா?’ன்னு கேட்டா….என்ன ஸம்பளம் வேணுன்னு கேட்டா…..”
“நீ என்னடா சொன்ன?…”
“நா…..பெரியவா என்ன குடுக்கறேளோ, வாங்கிக்கறேன்னு சொன்னேன்…..”
பாட்டியின் முகத்தில் லேஸாக கோபம் தெரிந்தது!
“அசடே! பெரியவாகிட்ட ஸம்பளம்லாம் வாங்கக்கூடாதுடா ! அவரோட க்ருபா கடாக்ஷமே போறும்…ஒங்க குடும்பத்தை காப்பாத்தும்”
“செரி பாட்டி……”
கொஞ்சநாட்கள் கழிந்து, நம்முடைய தாயுமான’குழந்தை’ஸ்வாமி, வேதபுரியின் வாயைக் கிண்டியது……
“என்ன? ஒனக்கு எவ்ளோ ஸம்பளம் வேணும்? சொல்லவேயில்லியே…”
“எனக்கு பெரியவாளோட அனுக்ரஹம் மட்டும் போறும்…”
“ஓஹோ! என்ன? அந்த பணக்காரப்பாட்டி சொன்னாளாக்கும்?…”
“ஆமா…….”
பெரியவாளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. சாதுர்மாஸ்யம் முடிந்ததும், பெரியவா எசையனூரை விட்டுக் கிளம்பினார். வேதபுரியின் வீட்டுவாஸலில், வேத முதல்வனின் பல்லக்கு நின்றது! வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் நமஸ்காரம் செய்தனர். குறுகுறுவென்று பார்த்துக் கொண்டு நின்ற சிறுவன் வேதபுரியிடம்,
“அன்னிக்கி என்னோட வரேன்னியே?……வரயா?….”
“ஓ ! வரேனே!…”
பக்கத்தில் நின்று கொண்டிருந்த கோகிலாப்பாட்டியிடம்,
“என்ன? இந்தக் கொழந்தைய அழைச்சுக்கட்டுமா?……..”
பாட்டியோ, வேதபுரியின் பரம பாக்யத்தை எண்ணியெண்ணி கண்கள் ஆறாகப் பெருக,
“ஈஶ்வரா! பெரியவா இஷ்டம்! பாவம்….தாயில்லாக் கொழந்தை, பெரியவாதான் பாத்துக்கணும்”
“.நீ…..நெறைய்ய செஞ்சுட்ட….இனிமே…..இந்தக் கொழந்தைய… நா…..பாத்துக்கறேன்! [ஆஹா! எப்பேர்ப்பட்ட அனுக்ரஹ அரவணைப்பு!] ஒங்கிட்ட கேக்கறதுக்கு முந்தியே, இவன்ட்ட, எங்கூட வரயான்னு கேட்டேன்….”
அழகாக சிரித்துவிட்டு, வேதபுரியிடம்,
“போ! ஒங்கப்பாக்கு அபிவாதயே சொல்லி, நமஸ்காரம் பண்ணிட்டு, அவர்ட்ட, ‘பெரியவா என்னை கூப்பட்றா……நா, அவரோட போறேன்-ன்னு சொல்லு’……….ஒங்கப்பா, ‘மடத்ல.. ஒன்னை யாரு பாத்துப்பா?-ன்னு கேப்பார்…….அதுக்கு நீ……”என்னை பெரியவா பாத்துப்பா! ஒன்னைத் தம்பி பாத்துப்பான்னு சொல்லு!..”
ஒரு சின்னக் குழந்தைக்கு, ‘மோனோ ஆக்டிங்’ பண்ணி, சொல்லிக் குடுத்து, தன்னுடன் அழைத்துக் கொண்டு போக “ஜகத்குரு” அடமாக இருந்திருக்கிறார் என்றால், வேதபுரி மாமாவின் மஹா மஹா என்று கோடி கோடி மஹா போட்டாலும் அளவிட முடியாத பாக்யத்தை என்னவென்று சொல்லுவது?
வேதபுரி, பெரியவா சொன்னபடி, அக்ஷரம் மாறாமல் அப்பா ஸீதாராமய்யரிடம் ஒப்பித்ததும்,
“ஒரு வேஷ்டி, துண்டு, சொம்பு……எடுத்துண்டு வா!….”
அவ்வளவுதான்!
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்து: ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவதேவா……”
இந்த ஸ்லோகம் வேதபுரி என்ற திவ்யமான சிறுவனுக்காகவே பாடப்பட்டதோ என்னவோ? அந்த க்ஷணத்திலிருந்து, பெரியவா என்ற “உம்மாச்சி”தான் அவருக்கு ஸர்வமும் !
பெரியவாளின் பல்லக்கு கிடுகிடுவென்று கிளம்பி வேகமாகப் போய்விட்டது! வேஷ்டி, துண்டு, சொம்பு ஸஹிதம் பெரியவாளைத் தொடர்ந்து ஓடினான் சிறுவன் வேதபுரி! அவன் ஓடி வருவதைப் பார்த்ததும், பெரியவாளின் மாத்ருபாவமும் பெருகி ஓட ஆரம்பித்துவிட்டது! பல்லக்கிலிருந்து எட்டிப் பார்த்து,
“நீ….கொழந்தை….நடக்க முடியாது! அதுனால, பின்னால சின்ன மாட்டுவண்டி வருது பாரு! அதுல ஏறிக்கோ!…”
வேதபுரியின் உயர்ந்த குணம்.. “implicit obedience” ! உடனே பின்னால் வந்த மாட்டுவண்டிக்கு ஓடினான். ஆனால், வண்டியில் இருந்தவர்களோ…..
“நீ சின்னக் கொழந்தடா! ஆத்துல ஒன்னைத் தேடுவா! நீ போ!…” என்று வண்டியில் ஏறவிடவில்லை.
‘ஓடு! பெரியவாளிடம் ! ‘என்று மறுபடி பல்லக்கின் அருகில் ஓடினான்.
“உம்மாச்சி……என்னை வண்டில ஏத்திக்க மாட்டேங்கறா!…”
“செரி….அதோ…..அங்க மண்ணாதி [ஸவாரி] குதிரை மேல போறான் பாரு! அவனைக் கூப்டு!…”
[பெரியவாளுடைய யாத்ரையில், மண்ணாதி என்ற குதிரை ஸவாரி, டக்கா என்ற வாத்யம் வாஸிக்கும் கோஷ்டி, தபால் என்று அந்தந்த ஊர்களில் ஸ்ரீமடத்துக்கு வரும் லெட்டர்களை ஸேகரிப்பது என்று இந்த பரிவாரங்களும் கூடவே போகும்]
வேதபுரி போய்க் கூப்பிட்டதும், குதிரை ஸவாரிக்காரன் பெரியவாளின் பல்லக்கு அருகில் வந்தான்.
“இந்தக் கொழந்தைய ஒன்னோட குதிரைவண்டில ஏத்திக்கோ!….”
“ஸரிங்க எஜமான்..”
இந்த வண்டியில் ஏறும்போதே முன்ஜாக்ரதையாக, “பெரியவா சொல்லித்தான் வந்தேன்! ஆத்துல சொல்லிட்டுத்தான் வந்தேன்” என்று சொன்னதும், வண்டியில் இருந்தவர்கள் வேதபுரியை பயபக்தியுடன் பார்த்தார்கள்.
யாத்ரை, அடுத்து ஏதோ ஒரு ஊரில் நின்றதும், பெரியவா ரொம்ப ஞாபகமாக வேதபுரியை அழைத்து,
“செரி இப்போ சொல்லு……எந்த மாமா ஒன்னை வண்டில ஏத்திக்க மாட்டேன்னு சொன்னா?……”
“எதுக்கு யாரையும் மாட்டிவிடணும் ” என்ற நல்லெண்ணத்தில், ‘இல்லை, வேண்டாம்’ என்று தலையாட்டினான் வேதபுரி.
“ஏண்டா பயப்படறே? அவா ஒன்னை ஆத்துக்கு அனுப்பிடுவான்னு பயமா?….”
“இல்லை…..ஒங்களுக்கு கைங்கர்யம் செய்யக் கெடைக்காதோன்னு பயமா இருக்கு பெரியவா”
இந்த ஒரேயொரு உயர்ந்த சிந்தைக்காகவே, வேதபுரி பெரியவாளுக்கு அணுக்கமானான்.
“நா…..இருக்கேன்! பயப்படாம காட்டு”
வேதபுரி ஒருவரைக் கைகாட்டினான்.
“வெங்கட்ராமா! நாந்தான் கொழந்தைய அழைச்சுண்டு வந்தேன்…….ஜாக்ரதையா பாத்துக்கோ”
“உத்தரவு பெரியவா……”
ஸாதாரண அம்மாவே அன்பின் ஶிகரமாக இருப்பாள்! இவரோ…..ஜகன்மாதா! இந்த பேரன்பை அளக்க முடியுமா?
சிறுவன் வேதபுரி, நம் வேதமாதாவுக்கு செல்லப் பிள்ளையானான்!
Smt Revathi published two books titled “Thayumana Mahan”. It is all the narration of incidents by Brahmasri Vedapuri mama. It came out in two volumes. Mami has reprinted them and is available for sale. All the sale proceedings will be donated to Govindapuram Thapovanam Bikshavandhanam.
Please contact Smt Revathi Kumar at 9789082269 to get your copy.
Hara Hara Sankara Jaya Jaya Sankara
Kindly give sri Vedapurimama address
he is in Ambattur chennai, he is my athimber he is staying at vallallar 2nd street, thirumullaivayal, ambattur. contact no.9710423967
Please give the residential address of Sri Vedapuri Mama.
Ananthakodi namaskaram to Bramha Sri Vedapuri Mama. Hope there will be part II on this. Great Interview. Book Thayumana Mahan is very nice. No surprise of on political leaders sri karunanidhi or sri annadurai or sri MGR meeting Mahaperiyavaa. In front of Bramham all are one. Periyava thiruvadi charanam. jaya jaya sankara hara hara sankara
Very great interview from Maha Periyava’s Anukkath ThoNdar! Fully oozes Bhakthi! May Brahmasri Vedapuri Maama live long, bless us and share his nectarine experiences with Maha Periyava! It is a great treasure to listen to this interview! May more such Experiences be shared by Devotees! Hara Hara Shankata, Jaya Jaya Shankara!
Superb interview. One of the few who are alive who have lived with both Maha Periyavaa and Bhagavan Ramana
Thank u so much fr vedapuri mamas interview.
We r blessed. Seeking ur blessings mama.
Periyava charanam.
I NEED BRAHMASRI VEDAPURI MAMA ADDRESS.
This interview will help people to know Sri Periyava at various stages, since this is as old as sri vedapuri mama. I was blesssed by Sri Periyava to be with sri vedapuri mama’s Sastiappthapoorthi. What a memorable day which i recollect today with your postings. Great
We are not blessed in these years by Maha Periyava to physically call us to serve him. We lost the opportunity these days, but we enjoy serving His Holiness mentally by hearing and viewing the experience of old generation people, like VEDAPURI MAMA and lot others .
Could anyone please kindly provide english sub titles for non Tamilians like me to understand…that would be a great service to other devotees…thanks
We are doing our best possible to publish articles both in english and tamizh. It is always a challenging task due to limited resources.. However, Prof Sujatha Vijayaraghavan has voluntarily taken up the mammoth initiative of translating the narratives documented as video experiences into book. You can find them here…
யாதும் அறியாத பருவம் ஐயா அது உமக்கு அது
யாதும் அறியாத பருவம்
எட்டு வயது – இன்னும் உமக்கு
நிரம்பிட்ட பாடி ல்லை
எசயநூர் கிராமத்தில் எளிமையாய் வாழ்ந்து வந்தீர்
தாயை இழந்து விட்டீர் – அன்பு
தந்தை வளர்த்து வந்தார்
காஞ்சி மஹா பெரியவா ஒருநாள் பெரும்
கருணையோடு அங்கு வந்தார்
கிட்டக்க சென்றிட்டே அவரை தரிசனம் காணாமல்
எட்டக்க நின்றுகொண்டே அவரை எட்டி எட்டி பார்த்தீர்
காஞ்சி மஹானும் மிக்க
கருணையோடு உம்மை பார்த்து
என்ன பெயர் உனக்கு என்றிடவே
வேதபுரி என்றீர் – அந்த
வேத நாயகனும் உன்னை யார் என்றறிந்திருந்தார்
என்னுடன் வருவாயா என்றவர் கேட்டதற்கு
ஏதும் நினையாமல், உடனே வந்துவிட்டேன் என்று சொன்னீர்
காட்டிலும் மேட்டிலுமே அந்த
மேனா செல்லும் இடமெல்லாம்
கட்டிய வேட்டியுடன் நீங்கள்
கூடவே ஓடி வந்தீர்
கால்கள் கடுத்திட்டால் அதை
காஞ்சி மஹான் அறிவார்
பின்னால் வரும் வண்டியில்
ஏற்றி விடச் செய்வார்
நிர்கதியாய் நிற்பவர்க்கு – அவரன்றி
வேறு தெய்வம் உண்டோ?
பட்டினி பசியோடு ஒரு பச்சிளம் பாலகன்
எட்டு வயதுச் சிறுவன்
அம்மா இல்லாமல் ஓர் ஆதரவு இல்லாமல்
காஞ்சி மஹானே கதி
என்றி ருந்திடும் போது – தன்
பிக்ஷையில் ஒரு பங்கு அவர்
வாஞ்சையுடன் கொடுப்பார்
தாயு மானவரே அவர்
தாயு மானவரே
உம்மாச்சி உம்மாச்சி என்பீர்
உன்மத்தம் பிடித்தாற் போல்
உள்ளத்தில் ஒன்று வைத்து உதட்டால்
வேறோன்று பேச தெரியாது
பெண்டு பிள்ளைகட்கு ஒரு
பிரச்னை என்றாலும் – உங்கள்
உம்மாச்சியை விட்டகலீர்
உத்தமர் ஐயா நீர்
காஞ்சி மாமுனிவர் உமக்களித்த பட்டம்
பரமேஸ்வரனே அளித்த பிரமஹ்ஸ்ரீ பட்டம்
வேதப் பிராமணர்களுக்கும் இல்லை அப்பட்டம்
வைஷ்ணவ பிரபத்தி செய்த உமக்கே அப்பட்டம்
அன்றோடு இன்றுவரை அணுக்கத் தொண்டர்கள்
ஆற்றிட்ட கைங்கர்யம் அதற்கோர் அளவில்லை
சித்திர குப்தனும் ஏட்டில் எழுத வில்லை
சிவனை சிந்திப்பாற்கு எந்த குறையும் இல்லை
இங்கிருந்த படியே எங்கள் இரு கைகூப்பி
வந்தனம் செய்கின்றோம் வேறொன்றும் அறிந்திலோம்
உங்கள் கைகளை தாரும் ஐயா
எங்கள் கண்களில் ஒத்தி கொள்வோம்
Will Mama travel overseas to conduct a yaagam ? Please advise .
Mama is now in his 90+. Even otherwise, he doesn’t travel out of Bharath.
Namasthe