ஸ்ரீ மகாபெரியவா ஸ்துதி
ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது பதினைந்தாவது வயதில் (1983 ம் வருடம் மே மாதம் 29ம் தேதி) பட்டம் ஏற்றவுடன் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு பெரியவா பற்றி எழுதிய தசகம் (பத்து ஸ்லோகம் அடங்கியது).
M S Subbulakshmi – Chandrasekhara Sthuthi by Sri Vijayendra Saraswathi swami by Mahaperiyava Puranam on Mixcloud
1.ச்ருதி ஸ்ம்ருதி புராணோக்த தர்மமார்கரதம் குரும் பக்தாநாம் ஹிதவக்தாரம் நமஸ்யே சித்தசுத்தயே
வேதங்கள் ஸ்மிருதிகளில் கூறப்பட்ட அனைத்து தர்மங்களையும் அனுஷ்டித்துக்காட்டி ஈடுபடுபவரும்,உலகின் குருவாக விளங்குபவரும் பக்தர்களுக்கு நன்மையைப் புகட்டுபவருமான குருவை மனம் சுத்தமாவதற்கு வணங்குவேன்.
2.அத்வைதானந்தபரிதம் ஸாதூநாமுபகாரிணம் ஸர்வ சாஸ்திரவிதம் சாந்தம் நமஸ்யே சித்தசுத்தயே
அத்வைத நிலையின் பேரானந்தத்தினால் திளைத்துள்ளவரும் நல்லோர்களுக்கு விருப்பத்தை நிறைவேற்றுபவரும் எல்லா சாஸ்திரங்களையும் அறிந்தவரும் அமைதியே வடிவானவரும் ஆன குருவை மனம் சுத்தமாவதற்கு வணங்குவேன்.
3.கர்ம பக்தி ஞானமார்க ப்ரசாரே பத்தகங்கணம் அனுக்ரஹப்ரதாதாரம் நமஸ்யே சித்தசுத்தயே
கர்மா பக்தி ஞானம் என்ற மூன்று வழிகளையும், (நடந்து காட்டி), மற்றவர்க்குப் பிரசாரம் செய்வதில் முனைந்துள்ளவரும், எப்போதும் யாவர்க்கும் அனுக்ரஹம் பண்ணுபவரும்(பார்வை,புன்முறுவல்,பேச்சுகளால்) ஆன குருவை மனம் சுத்தமாவதற்கு வணங்குவேன்.
4.பகவத்பாதபாதாப்ஜவிநிவேசிதசேதஸ ஸ்ரீ சந்த்ரசேகரகுரோ ப்ரஸாதோ மயி ஜாயதாம்
ஆதிசங்கரரின் பாதகமலங்களில் ஈடுபட்ட மனதை உடையவரான ஸ்ரீ சந்த்ரசேகர குருவின் கருணை கடாட்சம் என்னிடம் உண்டாகட்டும்
5.சேத்ர தீர்த்தகதாபிக்ஞ ஸச்சிதானந்தவிக்ரஹ சந்திரசேகரவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி
ஒவ்வொரு புனிதஸ்தலம்,தீர்த்தம் முதலியவற்றின் உண்மைக் கதைகளை அறிந்தவரும், ஸச்சிதானந்தவடிவமானவரும் ஆன ஸ்ரீ சந்திரசேகரரான சிறந்த குரு எப்பொழுதும் என் மனதில் வசிக்கட்டும்
6.போஷணே வேத சாஸ்த்ராணாம் தத்தசித்தமஹர்நிசம் சேத்ரயாத்ராரதம் வந்தே ஸத்குரும் சந்திரசேகரம்
வேதசாஸ்திரங்களை நன்கு வளரச்செய்யும் கார்யத்தில் அல்லும் பகலும் மனதைச் செலுத்தி ஆலோசிப்பவரும் ( பல திட்டங்களை உருவாக்கியவரும் ) பற்பல புண்ணிய சேத்திரங்களுக்கு பாத யாத்திரை செய்வதில் ஈடுபட்டவரும் (உண்மையில் சேத்ரங்களுக்கே பெருமை ஏற்படுமாறு விஜயயாத்திரை அமைகிறது ) ஆன ஸத்குரு ஸ்ரீ சந்திர சேகரரை வணங்குகிறேன்
7.வேதக்ஞான் வேதபாஷ்யக்ஞான் கர்த்தும் யஸ்ய ஸமுத்யம் குருர்யஸ்ய மஹாதேவ தம் வந்தே சந்திரசேகரம்
தகுதியுள்ளவர்களை வேதம் கற்றவர்களாயும் வேதம் கற்றவர்களை வேதப்பொருளை அறிந்தவர்களாகவும் ஆக்கும் பணியில் முயற்சியுடையவரும் ஸ்ரீ மஹாதேவேந்திர சரஸ்வதியை குருவாக உடையவரும் ஆன சந்திரசேகரரை வணங்குகிறேன்
8.மணிவாசக கோதாதி பக்தி வாகம்ருதைர்ப்ருசம் பாலானாம் பகவத்பக்திம் வர்த்தயந்தம் குரும் பஜே
மாணிக்கவாசகர் ஆண்டாள் முதலியோரின் பக்தி ததும்பும் பாட்டுகளைப் பரப்புவதன் மூலம், குழந்தைகளுக்கு கடவுள் பக்தியை வளர்பவரான குருவை ஸேவிக்கிறேன்
9.லகூயதேசைர் நாஸ்திக்யபாவமர்த்தனகோவிதம்
சிவம் ஸ்மிதமுகம் சாந்தம் ப்ரணதோஸ்மி ஜகத்குரும்
எளிய யாவர்க்கும் மனதில் பதியுமாறு தெளிவான தன் தெய்வீகக் குரலின் ( பேச்சுகளால் ) உபதேசங்களால் நாஸ்திக்ய எண்ணங்களை அடியோடு அகற்றும் விஷயத்தில் நிகரற்றவரும் புன்னகை பூத்த முகத்தினால் மங்களங்களை அளிப்பவரும் சாந்திவடிவெடுத்தவருமான ஜகத்குருவை வணங்குகிறேன்
10.விநயேந ப்ரார்த்தயேஸ்ஹம் வித்யாம் போதய மே குரோ
மார்கமன்யம் த ஜானேஸ்ஹம் பவந்தம் சரணம் கத
ஒ குருவே நான் எனக்குக் கல்வியை ( ஆத்ம ஞானத்தை ) போதிக்க வேண்டும் என்று வணக்கத்துடன் வேண்டுகிறேன் எனக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை உம்மையே சரணம் அடைந்துள்ளேன்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
sri Guruve charanam
I think on the slokam 9 லகூயதேசைர் must be “லகு உபதேசைர் “. based on the audio. Kindly verify with right people.
த்வம் வந்தே சந்த்ரசேகரம்……
Will verify and correct if needed.
Thanks
Mahaperiyava guruvaye saranam
A Great Prayer song to pray to Maha Periyava compused by Sri Bala Periyava. “Apaara KaruNaa Sindhum” was composed by Sri Periyava onHis Gurunaathar. Both give a lot of information about Maha Periyava’s Life and Services to humanity. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
Thanks Guruve sarnam
Please provide all slokams/stutis on Maha Periyava in your site. Especially I want the one which starts with’Kanchi kamakoti sthitha…….”
மார்க் மன்யம் த ஞானேஸஹம்
இது
மார்க மன்ய ந ஞானேஸஹம்்
என்பது தான் சரி
தட்டச்சு தவறாக இருக்கலாம்
Can we hv e original Sri maha Periyava stuti lyrics?
Thank you
श्रुति स्मृति पुराणोक्त धर्म मार्ग रतम् गुरुम् ।
भक्तानाम् हितवक्तारम् नमस्ये चित्त शुद्धये ।।
अद्वैतानन्द भरितम् साधूनाम् उपकारिणम्।
सर्व शास्त्रविदम् शान्तम् नमस्ये चित्त शुद्धये ।।
कर्म भक्ति ज्ञानमार्ग प्रचारे बद्द कङ्कणम्।
अनुग्रह प्रदातारम् नमस्ये चित्त शुद्धये ।।
भगवद्पाद पादाब्ज विनिवेषित चेतसः।
श्री चन्द्रशेखर गुरो: प्रसादो मयि जायताम्।।
क्षेत्र तीर्थ कथाभिज्ञः सच्चिदानन्द विग्रहः ।
चन्द्रशेखर वर्योमि सन्निधत्ताम् सदाहृदि ।।
पोषणे वेदशास्त्राणाम् दत्त चित्तमहर्णिशम् ।
क्षेत्र यात्रारतम् वन्दे सद्गुरुम् चन्द्रशेकरम् ।।
वेदज्ञान् वेदभाष्यज्ञान् कर्तुम् यस्य समुद्यमः ।
गुरुर्यस्य महादेवः तम् वन्दे चन्द्रशेकरम् ।।
मणिवाचक गोदादि भक्ति वागमृतैर्भृशम् ।
बालानाम् भगवद् भक्तिम् वर्धयन्तम् गुरुम् भजे ।।
लघूपदेशैर्नास्तिक्य भावमर्दन कोविदम् ।
शिवम्! स्मितमुखम्! शान्तम्! प्रणतोस्मि जगद्गुरुम् ।।
विनयेन प्रार्थयेहम् विद्याम् बोधय मे गुरो!
मार्गमन्यम् न जाने अहम् भवन्तम् शरणम् गतः ।।